தமிழ் இசை உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், 'ரகிட' என்டர்டெயின்மென்ட் சார்பாக மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடான ‘மன்னாரு’ பாடலை ரசிகர்களுக்கு வழங்குகின்றனர். இந்த பாடல், நேற்று (ஆகஸ்ட் 8) முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியானது.
தனது தனித்துவமான குரலால் மன்னர் முத்து இந்தப் பாடலை பாடியுள்ளார். கென் ராய்சன் இயக்கியுள்ள இந்தப் பாடல், விறுவிறுப்பான காட்சிகளும், உற்சாகமான இசையும் இணைந்த ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது.
இப்பாடலை பாடலாசிரியர்கள் கே.காட்டியன், கானா பிரான்சிஸ் ஆகியோர் எழுதியுள்ளனர்.
இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மன்னாரு’ பாடல், புதிய இசைப் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமையும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.