மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் கடைசியான வெளியான 'டர்போ' திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 'டர்போ' படத்தில் மம்மூட்டியுடன் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். இதற்கிடையில் மம்மூட்டியை வைத்து மலையாளத்தில் புதிய படம் ஒன்றை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
கவுதம் மேனன் சொன்ன கதை பிடித்திருந்ததால் மம்மூட்டியே தனது தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி மூலம் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்த படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாகவும் படத்தில் மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார் என்றும் அடுத்தப்படுத்து திரைப்பட வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சைலண்டாக கேரள மாநிலம் கொச்சியில் வைத்து படத்தின் பூஜையே நடந்து முடிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று முதல் படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது. படம் குறித்த அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.