வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அரசன்’. படத்தில் பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா உள்பட பலர் நடிக்கின்றனர்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று நிறைவடையும் தருவாயில் உள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரமாண்ட திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படுகிறது. இந்த அரங்கத்தில் வடசென்னை பகுதி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
3-வது கட்ட படப்பிடிப்பில் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் ராஜன் கேரக்டரில் நடித்த அமீரும், சந்திரா கேரக்டரில் நடித்த ஆண்ட்ரியாவும் படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். 3 மாதத்தில் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைகிறது. வருகிற தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிம்புவின் திரைப்பயணத்திலேயே இதுவரை உருவாக்கப்பட்ட திரைப்படங்களில், இதுவே மிகவும் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாக அமையும் என்று கூறப்படுகிறது.