சின்னத்திரையில் இருந்து நடிகராக உருவெடுத்து இருப்பவர் பாலா. சின்னத்திரையில் காமெடி, நடனம், தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட பாலா தனக்கு கிடைக்கும் பணத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்வதை வழக்காக கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்திய நகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலாவிடம் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் பாலா, "எனக்கு அரசியல் அறிவு கிடையாது; அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு இல்லை, நான் அவ்வளவு பெரிய ஆளும் கிடையாது.
என்னால் முடிந்த வரை, நான் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு கடைசி வரை மக்களுக்கு உதவி செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் என் நோக்கம்.
எனக்கு எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என்பதை நான் ஏற்கனவே பல இடங்களில் தெளிவுபடுத்திவிட்டேன். என் வாழ்நாளின் கடைசி வரை உழைத்து, அதில் வரும் வருமானத்தை கொண்டு மக்களுக்கு உதவிகள் செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு என் பயணம் தொடரும்," என்று தெரிவித்தார்.