எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘மான்ஸ்டர்’. நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த வருடம் மே மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
'மான்ஸ்டர்' படத்துக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் இணைந்து ‘பொம்மை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை ராதா மோகன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மான்ஸ்டர் படம் போல் பொம்மை திரைப்படத்தையும் மே மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.