சினிமா

ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’

ஆந்திர அரசு, தெலுங்கு திரையுலகில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆந்திர அரசின் 13 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

இந்த நிலையில் 2014, 2015, 2016 ஆகிய 3 ஆண்டுகளுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்தது.

இதில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி படம் 2015-ம் ஆண்டுக்கான 13 நந்தி விருதுகளை வென்று இருக்கிறது.

சிறந்த படம், சிறந்த இயக்குனர், துணை நடிகர் - நடிகைகள், சிறந்த வில்லன், இசை, பின்னணி பாடகர், சண்டை இயக்குனர், ஒளிப்பதிவாளர், டப்பிங் ஆகிய 13 நந்தி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.


2015-ம் ஆண்டு சிறந்த நடிகை விருது சைஸ் ஜீரோ படத்தில் நடித்த அனுஷ்காவுக்கும், 2014-ம் ஆண்டு சிறந்த நடிகை விருது கீதாஞ்சலி படத்தில் நடித்த அஞ்சலிக்கும் வழங்கப்படுகிறது.