இதையடுத்து, அதிக வசூலில் முதலிடத்தில் இருந்த ‘பாகுபலி-2’ அடுத்த சில வாரங்களிலேயே இரண்டாவது இடத்துக்கு வந்தது. இந்நிலையில், ‘பாகுபலி-2’ படத்தை சீனாவில் வெளியிட்டால் ‘தங்கல்’ சாதனையை முறியடித்துவிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்தனர். அதன்படி, வருகிற செப்டம்பர் 17-ந் தேதி ‘பாகுபலி-2’ படத்தை சீனாவில் வெளியிடவுள்ளனர்.
அதற்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவினர் அனைவரும் சீனாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் சுமார் 4000 திரையரங்குகளில் இப்படத்தை திரையிடப் போவதாக கூறப்படுகிறது. ‘தங்கல்’ படம் சீனாவில் 9000 திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.