சினிமா

விஷால் பாடலை வெளியிடும் ஆர்யா

விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘தலைவன் வருகிறான்’ என்ற பாடலை ஆர்யா வெளியிட இருக்கிறார்.

மாலை மலர்

‘தலைவன் வருகிறான்’ என்ற பாடலின் வரிகளை முருகன் மந்திரம் எழுதியுள்ளார். பத்திரிக்கையாளர் ராஜிவ் காந்தி இயக்கியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ளார். குணா கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இப்பாடலை இன்று இரவு 10 மணியளவில் ஆர்யா வெளியிட இருக்கிறார்.