சினிமா

இயக்குனராக மாறும் அனுபமா

பிரேமம், கொடி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், விரைவில் இயக்குனராக மாற இருக்கிறார்.

மாலை மலர்

பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்தார். அதன் பின்னர் தமிழ், மலையாளத்தில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அனுபமாவுக்குத் திரைப்பட இயக்கத்திலும் அதிக ஆர்வம் இருக்கிறது. படம் இயக்கியே தீருவேன் என்று துடிப்பாக இருந்த அனுபமா, இப்போது நடிப்புக்குச் சிறிது காலம் இடைவேளை விட்டிருக்கிறார். 

துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாளப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். விரைவில் இயக்குனராக மாற இருக்கிறார்.