சினிமா

‘மீண்டும் திருமணம் செய்வேன்’ -அமலாபால்

என் வாழ்வில் மீண்டும் நிச்சயமாக திருமணம் இடம் பெறும் என அமலாபால் கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை விரிவாக பார்ப்போம்...

மாலை மலர்

‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்தார். 2014-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2 வருடங்களில் திருமண வாழ்க்கை கசந்தது. 2016-ல் விவாகரத்து கேட்டு கோர்ட்டை அணுகினார்கள். கடந்த பிப்ரவரி மாதம் அமலாபால் சட்டப்படி இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்தார்.


அதன் பிறகு நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழில் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘திருட்டுப் பயலே-2’ மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். விவாகரத்து குறித்து சமீபத்தில் கூறிய அமலாபால், ‘எதிர்பாராத விதமாக எல்லாம் நடந்து விட்டது. நான் விஜய்யை இப்போதும் விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார்.