தற்போது கன்னடத்தில் மூன்று படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் தொழில் அதிபர் முஸ்தபா ராஜை காதல் திருமணம் செய்து கொண்டார்.
பிரியாமணி, பட அதிபரிடம் நஷ்ட ஈடு கேட்டு தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தெலுங்கில் தயாராகி உள்ள ‘ஆங்குலிகா’ என்ற படத்தில் பிரியாமணி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். 5 வருடங்களுக்கு முன்னால் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சில காட்சிகளில் நடித்ததும் பிரியாமணிக்கு தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க பிடிக்கவில்லை. இதனால் படத்தில் இருந்து விலகி விட்டார்.
இந்த படத்தில் கதாநாயகனாக தீபக் நடித்தார். இவர் அருந்ததி படத்தில் அனுஷ்கா ஜோடியாக நடித்தவர். பிரேம் ஆர்யன் டைரக்டு செய்தார். கோடி துமுலா, ராம்பாபு ஆகியோர் தயாரித்தனர். இதன் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்து டிரெய்லரை யுடியூப்பில் வெளியிட்டனர். அதில் பிரியாமணி நடித்த காட்சிகள் இருந்தன.