சினிமா

நடிகர் ஜெய்யை 2 நாட்களில் கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கில் நடிகர் ஜெய் ஆஜராகாததால் 2 நாட்களில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காருக்குள் மயங்கி கிடந்த நடிகர் ஜெய்யை தட்டி எழுப்பினர். அப்போது போதையில் ஜெய் காரை ஓட்டிவந்து தெரியவந்தது.

இதையடுத்து இதுகுறித்த விசாரணை நடத்திய போலீசார் ஜெய் மீது குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுதியதாக வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து ஜெய் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.