சினிமா

`அவன் இவன்' படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் - ஆர்யா

`அவன் இவன்' படத்தை தொடர்ந்து விஷால் - ஆர்யா மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளனர். அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.

மாலை மலர்

நடிகர் சங்க கட்டிடத்துக்கு பணம் திரட்டும் விதமாக, இப்படத்தில் இணைந்து நடிக்க விஷால் மற்றும் கார்த்தி ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இப்படத்தின் மூலம் வசூலாகும் பணத்தினை நடிகர் சங்க கட்டிடம் கட்ட பயன்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகரும், விஷாலின் நெருங்கிய நண்பருமான `கடம்பன்' ஆர்யா இந்த கலகல கூட்டணியில் இணைய இருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்யா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ஆர்யா - விஷால் இணைந்து `அவன் இவன்' படத்தில் நடித்திருந்தனர்.