சினிமா

சீனாவில் பிரம்மாண்டமாக ரிலீசாகும் ரஜினியின் 2.0

ரஜினியின் 2.0 படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தை அடுத்ததாக சீனாவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #2Point0 #2Point0InChina #2Point0MegaBlockbuster

ஷங்கர் - ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான 2.0 படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது. ரிலீசான 4 நாட்களில் படம் ரூ.400 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. 6 நாட்களில் படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. படத்துக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்த வண்ணமாகவே உள்ளது.

இந்த நிலையில், 2.0 படம் வருகிற மே 2019ல் சீனாவில் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது. 2.0 படத்தின் சீன ரிலீஸ் உரிமையை எச்.ஒய் மீடியோ கைப்பற்றியிருக்கிறது.

சீன மொழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்த படத்தை மொத்தமாக 10,000 திரையரங்குகளில், 57,000 திரைகளில் (47,000 3டி திரைகள்) வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் 3டி-யில் அதிக திரைகளில் வெளியாகும் வெளிநாட்டு படங்களின் பட்டியலில் 2.0 இடம்பிடித்துள்ளது. #2Point0 #2Point0InChina #2Point0MegaBlockbuster #Rajinikanth