விருச்சிகம்
மகிழ்ச்சியான வாரம். சுமார் 50 நாட்களுக்கு பிறகு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறப்போகிறார். அதன் பிறகு நன்மைகள் நடக்க துவங்கும். அதுவரை அடுத்தவர் பேச்சைக் கேட்டு உங்களுடைய மூளையை குழப்பாமல் சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. மிகுதியான கோபம், பிடிவாதத்தை தவிர்த்தால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். ஜாதகர் பார்க்கும் தொழில் மூலம் புகழ், அந்தஸ்து, கவுரவம் கிடைக்கும்.
தடைபட்ட வேலை மாற்றம் இடப்பெயர்ச்சி வெகு விரைவில் கிடைத்துவிடும். மாணவர்கள் பல அறிய புதிய விசயங்களை கண்டுபிடிப்பார்கள். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வார்கள். சிலர் ஒப்பந்தப் பணி முடிந்து தாயகம் திரும்புவார்கள். குடும்பத்தினர் உங்கள் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கணவன், மனைவி உறவில் நிலவிய பனிப்போர் விலகும். செவ்வாய்க்கிழமை பாலமுருகனை வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406