கும்பம்
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசியை பக்க பலமாக பார்த்து ராகுவின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிய குரு பகவானின் பார்வை வெகு விரைவில் மறையப் போகிறது. சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தமாக பிரிந்து வாழலாம். சிலருக்கு தொழில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு அல்லது பிரியும் நிலை ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்வார்கள்.
சிலருக்கு பார்த்த வேலைக்கு உடனே ஊதியம் வராமல் தடை தாமதமாகும். மண வாழ்க்கையில் பிரிவை சந்தித்தவர்களுக்கு மறுதுணை அமையும். கடன் பெறும் போதும், கடன் கொடுக்கும் போதும் படித்துப் பார்த்து கையெழுத்து போட வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை ஏற்பட வாய்ப்புள்ளது. தடாலடியான நடவடிக்கைள், புதிய முயற்சிகள் ஆகியவற்றைக் தவிர்க்கவும். பேச்சில் சிந்தனையில், கவனத்துடன் இருக்க வேண்டும். அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும். சனிக்கிழமை சர்க்கரை தானம் வழங்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406