சிம்மம்
சிறப்பான பலன்கள் தேடி வரும் வாரம். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். சொத்துப் பங்கீட்டில் நிலவிய கருத்து வேறுபாடு மறையும். பங்குச்சந்தை வியாபாரம் படுஜோராக நடக்கும். கடனுக்காக பணயம் வைத்த வீட்டுப்பத்திரங்கள் மற்றும் நகைகளை மீட்டெடுக்கும் வாய்ப்பு வரும். இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் கூடி மகிழ்வார்கள்.
சிலருக்கு மறு திருமணம் நடக்கும். மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். செய்யாத குற்றத்திற்காக அனுபவித்த தண்டனையிலிருந்து விடுபடுவீர்கள். மேலும் இது அஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக தசை புத்திக்கு ஏற்ப செயல்படுவது உத்தமம். அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பங்குனி உத்திரம் அன்று செவ்வரளி மாலை அணிவித்து சிவனை வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406