வேலைப் பளு கூடும் வாரம். ராசிக்கு சனி செவ்வாய் மற்றும் புதனின் பார்வை உள்ளது. புதிய முயற்சிகள், சிந்தனைகள் வெற்றி தரும். பணம் பல வழிகளில் வந்து சேரும். பொருளாதார நிலை திருப்தி கரமாக இருக்கும். வராக்கடன்கள் வசூலாகும். வீடு, நிலம், வாகனம் வாங்குதல், கால்நடை வாங்குதல் ஆகியவை ஏற்படும். சிலர் நீதி மன்ற வழக்கிற்கு அதிக பணம் செலவு செய்ய நேரும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிக்க முயற்சிக்கலாம். ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. சிலருக்கு வேலை மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் ஏற்படலாம். பிறரை நம்பி ஒப்படைத்த செயல்களால் விரோதம் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கூட்டுக் குடும்பம், கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இழுபறியாக இருக்கும். பிள்ளைகளின் திருமண முயற்சி கைகூடும். முன் கோபத்தைக் குறைத்து நிதானமாக செயல்படவும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடவும்.