காரிய சித்தி உண்டாகும் வாரம். மீன ராசிக்கு 2,9ம் அதிபதியான செவ்வாய் 4ம்மிடமான கேந்திரம் ஏறி நிற்பது மிகச் சிறப்பான அமைப்பாகும். நிதானம் மற்றும் நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். கடன் தொல்லை குறையும். அடமான சொத்துக்கள் நகைகளை மீட்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலை திருப்தியாக இருக்கும். பூர்வீகம் குலதெய்வம் குழந்தை சார்ந்த செயல்களால் ஆதாயம் ஏற்படும். பங்குச்சந்தை, பந்தய வெற்றி, எதிர்பாராத தொழில் லாபம் போன்றவற்றால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் வருவதற்கு புதிய முயற்சிகளை, யுக்திகளை கடைபிடிப்பீர்கள். எதிரிகளை அடக்க முடியும் என்பதால் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். தாயின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். பவுர்ணமி அன்று விரதம் இருந்து திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.