தெய்வ அனுகூலம் உண்டாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஜ கிரகங்களான குருவும் சூரியனும் சேர்க்கை பெற்று உள்ளார்கள். குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடை தாமதங்கள் அகலும் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து மருமகள், மருமகன் பேரன் பேத்தியை பார்ப்பீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும். கவுரவப் பதவி, கவுரவப் பட்டம் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகமாகும். புதிய ரத்த அணுக்கள் உற்பத்தியாகி நோய் எதிர்ப்பு சக்தி கூடும். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். ஆடம்பரச் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க திட்டமிடுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பெருகும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்தது போன்ற சிறப்பான நல்ல வரன்கள் தேடி வரும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நிற ஆடை, பூக்கள் அணிவித்து வழிபடவும்.