பராபவ வருடம் ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே தனவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும். மேலும் தொழில் ஸ்தானாதிபதியான குரு உச்சம் பெற்று புதனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் இதுவரை இல்லாத அளவிற்கு லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நாடு மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் நன்மை தரும் விதம் அமையும்.
ஆவணி 1-ந் தேதி (18.8.2026) அன்று புதன், சிம்ம ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும்போது நல்ல காரியங்கள் நிறைய நடைபெறும். குறிப்பாக ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல் அதிகம் கிடைக்கும். வீடு கட்டுவது அல்லது வாங்குவது பற்றிய சிந்தனை வெற்றிபெறும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய சில சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். அதே சமயம் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். என்றாலும் அதைத் தக்க வைத்துக் கொள்வது அரிது. உறவினர் பகையை வளரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
ஆவணி 15-ந் தேதி (1.9.2026) அன்று சுக்ரன், துலாம் ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5. 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும் நேரத்தில், பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பூர்வீகச் சொத்துகளை விற்று, புதிய சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். பயணங்கள் பலன் தரும் விதம் அமையும். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புதியவர்களின் தொடர்பால் பொருளாதார நிலையைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். ஆரோக்கியத் தொல்லை அகன்று உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல திகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு கவுரவம் உயரும். மாணவ - மாணவியருக்கு படிப்பில் தேர்ச்சி ஏற்படும். பெண்களுக்குப் பொருளாதாரத்தில் நிறைவு கிடைக்கும். புகழ் கூடும்.