தொழில் வளம் சிறக்கும் வாரம். ராசிக்கு செவ்வாய் குரு பார்வை உள்ளதால் குரு மங்கள யோகம் உண்டாகுகிறது. சமூக அந்தஸ்து ராஜ மரியாதை கிடைக்கும். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தால் தொழிலில் நல்ல வருமானம் உண்டாகும். அலுவலக டென்ஷன் குறையும். சிறு கடன் சுமை இருந்தாலும் கடன்காரர்களின் கெடுபிடி குறையும். வராக்கடன்கள் வசூலாகும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு ஏற்றமான காலம். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பெண்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். அதற்குக் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். மைத்துனரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பௌர்ணமி விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடவும்.