மனதில் தெளிவு பிறக்கும் வாரம். ராசிக்கு உச்ச குரு மற்றும் நீச்ச செவ்வாயின் பார்வை உள்ளது. புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கடன் தொடர்பான சர்ச்சைகள் முழுமையாக விலகி தொழிலில் பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள். தொழிலில், நிலவி வந்த சிக்கல்கள் நீங்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்க்கவும். இயன்றவரை வேலையை மாற்றாமல் இருப்பது நல்லது. தந்தை வழிச் சொத்துக்களில் உடன் பிறந்தவர்களுடன் சிறு பிணக்கு மன பேதம் தோன்றும். சுபச் செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். பெண்கள் நண்பிகள் மற்றும் உறவுகளுக்கு தங்க நகைகளை இரவல் கொடுக்க கூடாது. சிலருக்கு இடப் பெயர்ச்சியால் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். ராகு கேதுவின் சஞ்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் கோட்சார ரீதியாக திருமணத் தடை ஏற்படலாம். மேலும் பல பாக்கியங்களை அடைய மகாலட்சுமியை வழிபடவும்.