பொருளாதாரம் மேன்மை உண்டாகும் வாரம். தன ஸ்தான அதிபதி சூரிய பகவான் ஆட்சி பலம் பெற்றுள்ளார். புதிய தொழில் தொடங்க உகந்த காலம். குடும்பத்தில் நிலவிய சிக்கல்கள், பிரச்சனைகள் விலகும். பணத் தட்டுப்பாடு குறையும். தொழில் துறையில் தேக்க நிலை இருக்காது. தொழிலில் உழைப்புக்கு கைமேல் பலனாக பணம் வந்து குவியும். பண நெருக்கடி காலத்தில் விலகிய உறவுகள் மீண்டும் வந்து ஒட்டி உறவாடுவார்கள். உயர்வு உண்டாகும். சத்ருக்கள் தொல்லை அகலும். என்றோ வாங்கி வைத்த பங்குகளின் மூலம் கணிசமான ஆதாயம் உண்டாகும். கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தால் திருமணத் தடை ஏற்படலாம். கற்பனைக் கவலை கள் உண்டாகும். எந்த பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை உண்டாகும். அதிர்ஷ்டத்தைத் தேடுபவர்களுக்கு திறமை, முயற்சி, பொறுமை, உழைப்பு ஆகியவற்றால் வெற்றி பெரும் சூட்சமத்தை ராகு கேதுக்கள் கற்றுக் கொடுப்பார்கள். மாமன், மைத்துனர் வழியில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகளின் படிப்புச் செலவு கூடும். பவுர்ணமி அன்று ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வழிபடவும்.