தடை தாமதங்கள் விலகும் வாரம். வார இறுதியில் ராசிக்கு சுக்கிரனின் சம பார்வை கிடைக்கும். ஆத்ம ஞானம் கிடைக்கும். வாக்கு வன்மை உண்டாகும். நினைப்பதெல்லாம் உடனே நடக்கும். தலைமைப் பதவிகள் தேடி வரும். சிலருக்கு அரசியல் ஆர்வம் துளிர் விடும். எதிர்ப்புகள் போராட்டங்களை எதிர் நீச்சலடித்து வெற்றி பெறுவீர்கள். உங்களின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் உரிய பலன்கள் வந்தடையும். சிலருக்கு உழைத்து என்னத்த கண்டோம் என்ற சலிப்பு மேலோங்கும். அரசின் ஒப்பந்தாரர்களுக்கு ஆதாயம் மிகுதியாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் ஒத்திப் போகும். வீட்டு வாடகை உயரும். கடன் தொல்லை குறையும். ஆரோக்கியம் மேம்படும். தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். சிலர் தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவார்கள். முன்னோர்களின் பரம்பரைச் சொத்து, வங்கி சேமிப்பு இவற்றை பிரிக்க உற்றார் உறவினர்கள் உங்களை அணுகுவார்கள். பவுர்ணமி அன்று விரதம் இருந்து முருகனை வழிபடவும்.