வளமான பலன்கள் நடைபெறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் சுக ஸ்தானம் சென்று குருவுடன் சேர்க்கை பெறுகிறார். குரு மங்கள யோகத்தால் நினைத்தது நிறைவேறும். கௌரவம் அந்தஸ்து உயரும். தடை தாமதங்கள் விலகும். அதிர்ஷ்டம் அரவணைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். முக்கிய குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். நிலுவையில் உள்ள சம்பள பாக்கி கைக்கு வரும். சிலருக்கு இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தம்பதிகளுக்குள் நிலவிய கருத்து வேறுபாடு மறையும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பௌர்ணமி அன்று முருகப் பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.