புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு ஏழில் சூரியன், புதன், கேது சேர்க்கை ஏற்பட்டு கிரகணம் ஏற்பட உள்ளது. அறியாமல் வாங்கிய வில்லங்க சொத்திற்கு உரிய பட்டா மற்றும் முறையான ஆவணங்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியத்தில் ஏற்பட்ட காலதாமதம் அகலும். தடைபட்ட வாடகை வருமானம் கிடைக்கும். பல நாட்களாக நோய்க்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவார்கள். பிள்ளைகளால் ஆதாயமுண்டு. புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலை தேடி அலுத்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திடீர் மாற்றத்தால் மனம் ஆனந்தமடையும். கடந்த காலப் பிரச்சினைகளை மறந்து கணவன், மனைவி அன்புடன் இல்லறம் நடத்துவார்கள். கன்னிப் பெண்களுக்கு அழகும், கம்பீரமும் நிறைந்த வாழ்க்கைத் துணை கிட்டும். மாணவ, மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் நீங்கள் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். பவுர்ணமி அன்று விரதம் இருந்து துர்க்கை அம்மனை வழிபடவும்.