எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசியில் உள்ள ராகுவால் எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். எண்ணங்களை செயலாக மாற்ற முடியாது. மனதில் இனம் புரியாத பய உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். பணவரவில் தடை, தாமதம் ஏற்படுவதால் மன சஞ்சலம் உண்டாகும். லாபத்தை திட்டமிட்டு பயன்படுத்தினால் முதலீடுகளை அதிகரிக்க முடியும். வேலை இழந்தவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகம், தொழில்ரீதியாக வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகிட்டும். விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன் கிடைக்கும். வழக்குகளில் திருப்பம் உண்டாகும். 21.7.2026 அன்று காலை 7.54 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் தடை உண்டாகலாம். எதிர்மறை சிந்தனை மிகுதியாகும். பெரிய பணப் பரிவர்த்த னைகளை தவிர்க்கவும். குடும்பத்தினரின் அவச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். ஆடி செவ்வாய்க்கிழமையன்று இளநீர் அபிஷேகம் செய்து அம்மனை வழிபட வழிபட நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.