search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PBKS"

    • 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    • ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக விளையாடமாட்டார்.

    தென்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா. இவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் (கால் தசையில் தொற்று) காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த நாடு திரும்பிவிட்டார். இதனால் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்திலும், 19-ந்தேதி நடைபெறும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல தொடரில் பஞ்சாப் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    ரபாடாவின் காயம் குறித்து மருத்து குழு மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருவதாக தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

    டி20 உலகக் கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ரபாடா இடம் பெறுவது முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால், 15 பேர் கொண்ட அணியில் அவர் மட்டும்தான் கருப்பின வீரர் ஆவார். இது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் கொள்கைப்படி ஆறு வெள்ளை நிற வீரர்களும், இரண்டு கருப்பு நிற வீரர்களும் இடம்பெற வேண்டும். ஆறு வெள்ளை நிற வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் கருப்பு நிற வீரர்களில் ரபாடா மட்டுமே இடம் பிடித்துள்ளதால் அவர் அனைத்து போட்டிகளிலும் களம் இறங்க வேண்டும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    லுங்கி நிகிடி ரிசர்வ் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அன்ரிச் நோர்ஜே, ஜெரால்டு கோயட்சி, மார்கோ யான்சன், ஓட்டினியல் பார்ட்மேன் ஆகி வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    • நாளை நடைபெறும் சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிப்பு.
    • வியாழக்கிழமை ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக பஞ்சாப் அணி தெரிவித்துள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வந்தார். முதல் ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர் 152 ரன்கள் எடுத்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக அதன்பின் விளையாடாமல் உள்ளார்.

    அவர் அணிக்கு எப்போது திரும்புவார் என்பதை பாஞ்சாப் அணி நிர்வாகம் உறுதியாக தெரிவிக்கவில்லை. கடந்த ஐந்து போட்டிகளில் அவர் விளையாடவில்லை. சாம் கர்ரன் பொறுப்பு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் பஞ்சாப் அணி நாளை தரம்சாலாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெறும் போட்டியில் இருந்து விளையாட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசி ஐந்து போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா, சிஎஸ்கே அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றியை பெற்றுள்ளது.

    • பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 46 ரன்களை அடித்தார்.
    • ஷர்துல் தாக்கூர், கிளீசன், ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடிய பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 46 ரன்களை அடித்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரோசோ 23 பந்துகளில் 43 ரன்களை அடித்து அவுட் ஆனார்.

    பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சார்பில் ஷர்துல் தாக்கூர், கிளீசன் மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆனார்.
    • எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலி 15 ரன்களில் ஆட்டமிழக்க எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.

    இன்றைய போட்டியில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி 14 ரன்களை குவித்தார். இதில் ஒரு புண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி இரண்டு ரன்களை ஓட முயற்சித்த போது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

    இதன் காரணமாக சென்னை அணி போட்டி முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களை குவித்தார்.
    • பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    சென்னை அணிக்கு துவக்க வீரர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

    ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • சென்னை அணி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதுவரை விளையாடிய ஒன்பது போட்டிகளில் சென்னை அணி ஒரே முறை தான் டாஸ் வென்றிருக்கிறது. டாஸ்-இல் வெற்றி பெறுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்து இருந்தார்.

    டாஸ் வெற்றி பெற பயிற்சி எடுத்தும், சென்னை அணி இன்றைய போட்டியிலும் டாஸ்-இல் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக சென்னை அணி டாஸ்-இல் தோல்வியை தழுவி வருகிறது.

    • ஆர்சிபி ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடம்.
    • பஞ்சாப், மும்பை, டெல்லி அணிகள் தலா இரண்டு வெற்றிகள் மூலம் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணைகளைத் தவிர மற்ற எட்டு அணியிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டன.

    நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியே வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இதுவரை நடந்துள்ள போட்டிகள் முடிவில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்...

    ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து போட்டியில் நான்கில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் 3-வது இடம் வகிக்கிறது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா மூன்று வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் 4-வது இடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐந்தாவது இடத்தையும், குஜராத் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.

    பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய மூன்று அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறு போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரில் ஒரு அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 10 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஒன்பது அல்லது எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் ரன்ரேட், வெற்றித் தோல்வி ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

    தற்போதைய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் இருந்து அந்த அணி மீதமுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

    இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் ஏறக்குறைய போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். ஆகவே ஆர்.சி.பி. அணிக்கு இன்றைய போட்டியிலிருந்து அனைத்து போட்டிகளும் சால்வா? சாவா? போட்டிகள் போன்றே கருதப்படும்.

    பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    • மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை சேஸிங் செய்துள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் ஆறு முறை சேஸிங் செய்து முதலிடம்.

    குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 200 ரன்கள் வெற்றி இலக்காக பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. பஞ்சாப் அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    200 மற்றும் அதற்கு மேல் உள்ள இலக்கை வெற்றிகரமாக துரத்தியதில் பஞ்சாப் அணி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சேஸிங் செய்த அணிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி நேற்றைய சேஸிங் உடன் இதுவரை ஆறு முறை 200 ரன்ககளுக்கு மேலான இலக்கை எட்டி முதலிடம் பிடித்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை இலக்கை எட்டி 2-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா மூன்று முறை 200 ரன்களுக்கு மேலான இலக்கை எட்டி மூன்றாவது இடத்தை வகிக்கின்றன.

    குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 205 இலக்கை எட்டி இருந்தது. இதுதான் அந்த அணிக்கு எதிராக சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். தற்போது பஞ்சாப் அணி 200 இலக்க எட்டியுள்ளது.

    கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178 ரன்னையும், சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஓவர் நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் 171 ரன்னையும் எட்டி இருந்தது அதிகபட்ச சேஸிங் ஆகும்.

    • ஐபிஎல் ஏலத்தில் இது பெயர் கொண்ட மற்றொரு வீரரை ஏலம் எடுக்க இருந்ததாக பஞ்சாப் அணி தெரிவித்தது.
    • பின்னர் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் இணைத்துக் கொண்டது.

    குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

    அந்த அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 73 ரன்கள்தான் எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி தோல்வியடைந்து விடும் என எல்லோரும் நினைத்தனர். அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 23 பந்தில் அரைசதம் விளாசியதுடன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    இவரது ஆட்டத்தால் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. 61 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த சீசனில் மிகப்பெரிய சேஸிங் இதுவாகும்.

    ஐபிஎல் ஏலத்தின்போது நாங்கள் இதே பெயரை கொண்ட மற்றொரு வீரரை ஏலம் எடுக்க இருந்தோம். ஆனால் இந்த ஷஷாங்க் சிங்கை அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய்க்கு எடுத்து விட்டோம் என ப்ரீத்தி ஜிந்தா ஏலம் விடுபவரிடம் தெரிவித்தார். ஆனால் ஒரு வீரர் எடுக்கப்பட்டதாக அறிவித்த பின்னர், அவரை திரும்ப பெற முடியாது என ஏலம் விடுபவர் தெரிவித்தார்.

    இதனால் ஷஷாங்க் சிங் பஞ்சாப் அணியில் தவறுதலாக எடுக்கப்பட்டு இடம் பிடித்தார். ஆனால் நேற்று கதாநாயகனாக மாறி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். இனிமேல் வரும் போட்டிகளில் ஆடும் லெவன் அணியில் இவர் பெயர் தவறாமல் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

    ×