லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்களில் ஆல்-அவுட்

பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் முகமது அப்பாஸ் 4 விக்கெட்டும், முகமது அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முகமது அலி- முகமது அப்பாஸ்
முகமது அலி- முகமது அப்பாஸ்
Published on
Summary

இங்கிலாந்து வீரர்கள் ஜோர்டன் காக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் அரைசதம் அடிக்க முதல் இன்னிங்சில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகியுள்ளது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்தின் முகமது அப்பாஸ் மற்றும் முகமது அலி சிறப்பாக பந்து வீச, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க திணறினர்.

ஜோர்டன் காக்ஸ், ஜேமி ஸ்மித் அரைசதம்

ஜோர்டன் காக்ஸ் (55), ஜேமி ஸ்மித் (61) ஆகியோர் அரைசதம் அடித்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. கஸ் அட்கின்சன் 34 ரன்களுடனும், ஜோஸ் டாங்க் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர. மழைக்காரணமாக நேற்று 56 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

அட்கின்சன் 45 ரன்கள்

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அட்கின்சன் மற்றும் ஜோஸ் டாங்க் நிலைத்து நின்று விளையாடினர். அட்கின்சன் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து 66.4 ஓவரில் 290 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோஸ் டாங்க் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றும். 3-வது மற்றும் கடைசி போட்டி செப்டம்பர் 9-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com