ரத்தினாவதிக்கு தாயுமான சுவாமி சுகப்பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் திருவிழாவின் இன்று (செவ்வாய்க்கிழமை) நூற்றுக்கால் மண்டபத்தில் திருநாண் பூட்டுதல், திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
ரத்தினாவதிக்கு தாயுமான சுவாமி சுகப்பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி
ரத்தினாவதிக்கு தாயுமான சுவாமி சுகப்பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி
Published on

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் இரவில் சுவாமி, அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் 5-ம் நாளான நேற்று சிவ பக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு அவளது தாயாக தாயுமானசுவாமி வந்து பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ரத்தினாவதிக்கு மருத்துவம் பார்க்க, சுகப்பிரசவ மருந்தும், பீஜாதானமும் (வரதானம் நெல்) பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் பிரசவம் பார்த்து குழந்தையை தொட்டிலில் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி, அறுபத்து மூன்று நாயன்மார்களை எழுந்தருள செய்து தெரு அடைச்சான் விழாவாக கொண்டாடப்பட்டது. திருவிழாவின் 6-ம் நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் அம்மன் காலையில் நந்தவனத் திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்தல், பின்னர் திருக்கல்யாண உற்சவத்திற்கு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறுகிறது.

பிறகு நூற்றுக்கால் மண்டபத்தில் திருநாண் பூட்டுதல், திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அப்போது திருமாங்கல்ய பிரசாதம், சந்தனம், கற்கண்டு, தாலிசரடு ஆகியவை சுமங்கலி பெண்களுக்கு வழங்கப்படும். பின்னர் திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது. மாலையில் யானை வாகனம் மற்றும் பல்லக்கில் சுவாமி, அம்மன் காட்சிக் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com