ஆஞ்சநேயருக்கு மாலை சாற்றி வழிபடுவதன் பலன்கள்!

வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் எதிர்பட்ட துன்பங்கள் தூர விலகும்.திருமாலுக்கு மிகவும் பிடித்தது துளசி.
ஆஞ்சநேயருக்கு மாலை சாற்றி வழிபடுவதன் பலன்கள்!
Published on

வெற்றிலை:

ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதா, ஒரு கட்டத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அப்போது தான் ராமபிரானால் அனுப்பப்பட்ட அனுமன். இலங்கை வந்து சேர்ந்தார். அவர் உச்சரித்த 'ராமராம் என்ற நாமம் கேட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார் சீதா தேவி.

அதோடு தன்னை சந்தித்து ராமரின் கணையாழியை கொடுத்த அனுமனை, அங்கிருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஒரு வெற்றிலையைப் பறித்து தலையில் போட்டு "சிரஞ்சீவியாக இரு" என்று ஆசிர்வதித்தார்.

இதன் காரணமாகத்தான் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் பழக்கம் வந்தது. அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் எதிர்பட்ட துன்பங்கள் தூர விலகும்.

வாழைப்பழம்:

அனுமனுக்கு வாழைப்பழத்திலும் மாலை கோர்த்து அணிவிப்பார்கள். வானரங்களுக்கு (குரங்கு) வாழைப்பழத்தின் மீது அலாதி பிரியம். எனவே வானரமாக இருந்த அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணி விக்கிறார்கள்.

துளசி:

திருமாலுக்கு மிகவும் பிடித்தது துளசி. திருமாலின் அவதாரம் தான் ராமர். தனது பக்தனுக்கு செலுத்தும் மரியாதை தனக்கு செலுத்தும் மரியாதை என்று கூறியவர், ராமபிரான், எனவே அனுமனுக்கும் துளசி மாலை சாற்றுவதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

உளுந்து வடை:

ராவண யுத்தத்தில் வீரம் காட்டி நின்ற அனுமன், கொழுத்த அசுரர்களை வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தார். அதனால் கொழுப்பு சத்துக் கொண்ட உளுந்தில் வடை செய்து அவருக்கு மாலையாக அணிவிக்கிறார்கள். இந்த மாலையை சூட்டுவதால் தீமையில் இருந்து அனுமன் நம்மை காப்பார் என்பது நம்பிக்கை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com