

பராபவ ஆண்டு, ஆவணி-29 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி காலை 9.22 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : சுவாதி மாலை 5.41 மணி வரை பிறகு விசாகம்
யோகம் : சித்த / மரணயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் புறப்பாடு. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் உற்சவாரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
மேஷம் - உறுதி
ரிஷபம் - நட்பு
மிதுனம் - வரவு
கடகம் - கடமை
சிம்மம் - அமைதி
கன்னி - தீரம்
துலாம் - நன்மை
விருச்சிகம் - போட்டி
தனுசு - பரிசு
மகரம் - மகிழ்ச்சி
கும்பம் - இன்பம்
மீனம் - உவகை