

சென்னை புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 15-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணியளவில் நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 மணியளவில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணமும், இரவு 7.30 மணியளவில் சேஷ வாகனத்தில் உற்சவர் பெருமாள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கங்காதரன் செய்து வருகிறார்.