ஆவணி மூலத்திருவிழா: நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன.
ஆவணி மூலத்திருவிழா: நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல்
Published on

விழாவில் 2-ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை திருவிளையாடலுக்கு, அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் லீலை பற்றிய விவரம் வருமாறு:-

அப்போது அந்த நாரை இறைவனிடம், “பொற்றா மரைக்குளத்தில் இனிமேல் நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக் கூடாது. நீர்வாழ் உயிர்கள் இருந்தால் அவற்றை பறவைகள் உண்ணக்கூடும். இதனால் அந்த பறவைகளுக்கு பாவம் வந்துசேரும். எனவே பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இருக்கக் கூடாது” என்று வரம் வாங்கியதாக ஐதீகமாக நம்பப்படுகிறது. நாரைக்கு இறைவன் வழங்கிய வரத்தினால் இன்று வரை பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் இல்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com