காற்றின் வேகமும் இயல்பை விட அதிகமாக இருப்பதால் ஏராளமான இடங்களில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் பல இடங்களில் வீடுகள் மற்றும் பள்ளிகளின் மேற்கூரை காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
பருவமழை தொடங்கிய முதல்நாளான நேற்று, வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.