குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறும் விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி

குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றும் கூறாமல் மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #Gujaratviolence #RahulGandhi #Modi
குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறும் விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? ராகுல் காந்தி
Published on

ஜெய்ப்பூர்:

குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வரும் இந்தி மொழி பேசுபவர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் தாக்கப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றும் கூறாமல் மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

குஜராத்தில் வசித்து வரும் வெளிமாநில இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் என இந்தி மொழி பேசுபவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றும் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். #Gujaratviolence #RahulGandhi #Modi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com