

சீனாவின் சந்திர நாட்காட்டியின்படி (Lunar calender) ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஏழாவது மாதத்தின் ஏழாவது நாளில் கிஷி திருவிழா (Qixi festival) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழா பெரும்பாலும் சீனாவின் பாரம்பரிய காதலர் தினம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
கிஷி என்பது பண்டைய சீனர்கள் நட்சத்திரங்களை உற்றுநோக்கியதில் இருந்து தொடங்கியது. காலப்போக்கில், இந்த விழா கால்நடைகளை பராமரிப்பவர் மற்றும் நெசவுப் பெண்ணின் காதல் கதையுடன் பிணைக்கப்பட்டது.
இது, 'திறமைக்காக மன்றாடுதல்' என்று பொருள்படும் ' கிகியாவோ' போன்ற மரபுகளுக்கும் வழிவகுத்தது. முற்காலத்தில், பெண்கள் நிலவின் கீழ் ஊசிகளில் நூல் கோர்ப்பார்கள், கைத்திறனுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள்.
கியாகுவோ எனப்படும் நேர்த்தியான பலகாரங்களைச் செய்வார்கள், மேலும் நெசவுப் பெண்ணைக் கௌரவிப்பார்கள். இந்தப் பழக்கவழக்கங்களில் சில, இன்றும் சீனாவின் சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், மக்கள் கிஷி பண்டிகையைக் கொண்டாடும் விதம் தொடர்ந்து மாறிவருகிறது. சீனப் பயணத் தளமான டோங்செங் டிராவல் வெளியிட்ட அறிக்கையின்படி, சாதாரண நாட்களுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட் 19 அன்று இரவு நேரக் காட்சி இடங்களுக்கான முன்பதிவுகள் 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
படகுப் பயண முன்பதிவுகளும் 47 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும், அதில் வாடிக்கையாளர்களில் 76 சதவீதம் பேர் தம்பதிகளாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
பாரம்பரிய சடங்குகள் முதல் மாலை நேர படகு பயணங்கள் மற்றும் ஒளிக்காட்சிகள் வரை, கிஷி பண்டிகையானது பண்டைய பழக்கவழக்கங்களையும் அன்பை கொண்டாடும் நவீன வழிகளையும் ஒன்றிணைக்கிறது.
2026-இல் சீனா முழுவதும் மக்கள் கிஷி திருவிழாவை கொண்டாடும் விதமாக, ஆகஸ்ட் 19 அன்று சியான் நகரின் யோங்னிங் வாயிலுக்குக் கீழே நடைபெற்ற டாங் பாணி குழுத் திருமண விழாவில் ஐந்து புதுமணத் தம்பதிகள் பங்கேற்றனர்.
இந்த கிஷி திருவிழாவின் போது, குன்மிங்கின் ஷிலின் யி தன்னாட்சி மாவட்டத்தில் உள்ள கல் வனக் காட்சிப் பகுதியில் புதுமணத் தம்பதிகள் திருமண இனிப்புகளை வழங்கினர்.
'அஷிமா' என்ற சீனத் திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்புத் தளமான இந்த குறிப்பிட்ட இடத்தில் ஐம்பது தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர்.
கிஷி திருவிழாவிற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 18 அன்று, குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பிராந்தியத்தின், நான்னிங், யோங்னிங் மாவட்டத்திலுள்ள மெங்லியன் கிராமத்தில், ஒரு கிராமவாசி தனது வீட்டிற்கு வெளியே கிஷி பண்டிகையை மையமாகக் கொண்ட அரிசி தானியக் கலைப்படைப்பைக் காட்சிப்படுத்துவது சடங்காக பார்க்கப்படுகிறது.