வில்லியனூரில் விடுதலை சிறுத்தை ரெயில் மறியல்- 150 பேர் கைது

வில்லியனூரில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூரில் விடுதலை சிறுத்தை ரெயில் மறியல்- 150 பேர் கைது
Published on

வில்லியனூர்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக விமர்சித்த பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜாவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வில்லியனூர் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சுல்தான்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஒன்று திரண்டனர்.

அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த பயணிகள் ரெயிலை மறித்தனர். இதையடுத்து அவர்களை வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் தேவ. பொழிலன், தொகுதி செயலாளர் தமிழ்வளவன், கொள்கை பரப்பு செயலாளர் ஆதவன், எழில்மாறன், வாகையரசு உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

உப்பளம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அண்ணா சாலை அருகே சாலை மறியல் நடந்தது. தொகுதி செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் திருக்குமரன், ஜெயசெல்வி, செழியன், கலைச்செல்வன், சந்துரு, நீலமேகம், குமார், வினோத், யுவராஜ், ரமேஷ், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com