நாகர்கோவிலில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மும்மத வழிபாடு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நாகர்கோவிலில் இன்று கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் பெயரில் சிறப்பு வழிபாடு நடந்தது. #vijayakanthbirthday
நாகர்கோவிலில் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மும்மத வழிபாடு
Published on

நாகர்கோவில்:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் இன்று காலை மாவட்ட செயலாளர் அமுதன் தலைமையில் மும்மத வழிபாடு நடந்து. புத்தேரி யோகீஸ்வரர் கோவிலில் விஜயகாந்த் பெயரில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதைதொடர்ந்து வடசேரி தர்கா, கோட்டார் சவேரியார் ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நிகழ்ச்சியில் அவைத் தலைவர் கிருஷ்ணராஜ், பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர் ராஜன், வக்கீல் அணி செயலாளர் பொன் செல்வராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜேஷ், இந்தியன் சரேஷ், இளைஞரணி துணைச் செயலாளர் மதிமுருகன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ரிச்மோகன்ராஜ், மாவட்ட இளைஞரணி கவுதம். மகளிரணியை சேர்ந்த பாக்கியரதி, சுபா, தொண்டரணி ரபீக் பாய், ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளர் வைகுண்ட கண்ணன், பொதுக் குழு உறுப்பினர்கள் வைகுண்ட மணி, ஸ்டீபன், ஒன்றிய அவைத்தலைவர் தங்க கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி கவுதம், தர்மபுரம் ஊராட்சி செயலாளர் கலையரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி குமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பல்வேறு இடங்களில் கொடி யேற்று விழா நிகழ்ச்சி நடந்தது. #vijayakanthbirthday

X

Maalai Malar
www.maalaimalar.com