50 கிராமங்களுக்கு 25 ஆயிரம் தென்னங்கன்றுகள்- உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்

கஜா புயலால் பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் மிகவும் பாதித்த 50 கிராமங்களுக்கு 25 ஆயிரம் தென்னங்கன்றுகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
50 கிராமங்களுக்கு 25 ஆயிரம் தென்னங்கன்றுகள்- உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
Published on

சென்னை:

கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிரந்தரமான வாழ்வாதாரங்களை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் தென்னங்கன்றுகள் வழங்க தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

புயலில் அதிக அளவில் சேதமானது அந்த பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமான தென்னை மரங்கள் தான்.

இதையடுத்து பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் மிகவும் பாதித்த 50 கிராமங்களை மா.சுப்பிரமணியன் தேர்வு செய்துள்ளார்.

இந்த கிராமங்களுக்கு 25 ஆயிரம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நவீன ஒட்டு ரக மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பட்டுக்கோட்டை அருகில் உள்ள சூரப்பள்ளம் கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்குகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com