கொடநாடு கொள்ளை வழக்கை திசை திருப்ப முயற்சி- தினகரன் குற்றச்சாட்டு

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் தான் இதுவரை இந்த அரசு ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச மறுத்து வருவதாக டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டினார். #TTVDhinakaran #KodanadIssue
கொடநாடு கொள்ளை வழக்கை திசை திருப்ப முயற்சி- தினகரன் குற்றச்சாட்டு
Published on

மாமல்லபுரம்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு சுற்றுபயணமாக நேற்று இரவு கல்பாக்கம் வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் தான் இதுவரை இந்த அரசு ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச மறுத்து வருகிறது. இது அரசுக்கு ஆரோக்கியமானது அல்ல.

வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த அரசுக்கு முடிவு கட்டப்படும். தேர்தலில் கூட்டணி குறித்து எங்களிடம் சில கட்சிகள் பேசி வருகிறார்கள் விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #KodanadIssue

X

Maalai Malar
www.maalaimalar.com