தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத காலம் அவகாசம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் அளித்து இன்று நீட்டிப்பு செய்துள்ளது தமிழக அரசு. #ThoothukudiFiring #ArunaJagadeesan #TNGovt
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத காலம் அவகாசம்
Published on

சென்னை:

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது.

கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி இந்த ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை தொடங்கியது. பின்னர் பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 2-வது கட்ட விசாரணை கடந்த 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடந்தது.

3-வது கட்ட விசாரணையில் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள், பலியானவர்களின் உறவினர்கள் உள்பட மொத்தம் 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அனைவரும் ஆஜராகி ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு வாக்குமூலம் அளித்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த, அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. #ThoothukudiFiring #ArunaJagadeesan #TNGovt

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com