காஞ்சி சங்கரமடத்தில் கவர்னர் பன்வாரிலால் விஜயேந்திரருடன் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காஞ்சி சங்கரமடத்தில் விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார்.
காஞ்சி சங்கரமடத்தில் கவர்னர் பன்வாரிலால் விஜயேந்திரருடன் சந்திப்பு
Published on

காஞ்சீபுரம்:

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது 30-வது நாள் நிகழ்ச்சி காஞ்சீபுரத்தில் உள்ள சங்கர மடத்தில் இன்று நடந்தது.

இதில் கலந்துகொள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று மதியம் 12 மணியளவில் காஞ்சி சங்கரமடம் சென்றார். சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் சமாதிக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.

பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து கொண்டார். அவர் சங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம் ஆசிபெற்றார்.

கவர்னருடன் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் சென்று இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com