

சென்னை:
சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சர். பி.டி. தியாகராஜர் பிறந்த நாள் விழா மற்றும் ஜராவதம் மகாதேவனின் நூல்கள் அரசுடைமையாக்குவது தொடர்பான கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:-
வெள்ளுடை வேந்தர் சர். பி.டி. தியாகராஜருக்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 27ஆம் நாள் சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஏற்கனவே அரசு சார்பில் மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.
ஐராவதம் மகாதேவன் அவர்களது நூல்களை அரசுடைமையாக்க ஏற்கனவே என்னால் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #TNAssembly #Edappadipalaniswami