எல்லை தாண்டி பயங்கரவாத முகாம் அழிப்பு- விமானப்படைக்கு எடப்பாடி பழனிசாமி-தலைவர்கள் பாராட்டு

எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாத முகாமை அழித்த இந்திய விமானப்படைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். #IAFAttack #SurgicalStrike2 #IndianAirForce
எல்லை தாண்டி பயங்கரவாத முகாம் அழிப்பு- விமானப்படைக்கு எடப்பாடி பழனிசாமி-தலைவர்கள் பாராட்டு
Published on

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள மிகப்பெரிய பயங்கரவாத முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்துள்ளது. இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என வர்ணிக்கப்படும் இந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்திய விமானப்படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. பல்வேறு தலைவர்கள் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்கள் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமானப்படைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டால் வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மோடியின் தலைமையில் மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக பாஜக கூறியுள்ளது. நமது வீரர்கள் உயிரிழந்ததால் மிகுந்த வேதனையில் இருந்த ஒவ்வொரு இந்தியனுக்கும், இன்று காலை நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டதாக பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார்.

நாட்டு மக்களை பாதுகாக்க விமானப்படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நமது படை வீரர்களுக்கு பின்னால் மக்கள் உறுதியாக இருந்து ஆதரவு அளித்ததாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com