காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனங்கள் மீது கையெறி குண்டு வீச்சு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் பகுதி வழியாக ரோந்து சென்ற பாதுகாப்பு படை வாகனங்களின் மீது சில மர்ம நபர்கள் இன்று கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
காஷ்மீரில் பாதுகாப்பு படை வாகனங்கள் மீது கையெறி குண்டு வீச்சு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள பந்தா சவுக் பகுதி வழியாக இன்று மாலை வழக்கம்போல் மத்திய துணை ராணுவப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் சென்ற பாதுகாப்பு படை வாகனங்களின் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் வேட்டையில் அதிகாரிகளும், வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். #SrinagarCRPFparty

X

Maalai Malar
www.maalaimalar.com