

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றினார். அப்போது அவர், டாஸ்மாக்கில் 'பார்ட்டி ஃபண்ட்' வசூலிக்கப்படுவதாகக் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் அவர்களை அமைதிப்படுத்த முயன்றும் திமுகவினர் கேட்கவில்லை. தொடர்ந்து பேசிய சபாநாயகர், "முதலமைச்சர் பேசி முடித்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்குத் தகுந்த அனுமதி வழங்கப்படும்" என்று உறுதி அளித்தார்.
அமளியின் போது, தவெக சட்டமன்ற உறுப்பினர்களை நோக்கி திமுகவினர் ஒருமையில் பேசுவதாக தவெக அமைச்சர் ராஜ்மோகன் அவையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
அவையை முறைப்படுத்த முற்பட்ட அவை முன்னவர் செங்கோட்டையன், "திமுகவினர் தங்களது சொந்த ஆட்சியின் வழிமுறைகளையும், அவை விதிகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து விவாதத்தை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.