Tamil Nadu Election Results Live: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? - லைவ் அப்டேட்ஸ்

இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வாக்கு இந்த தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அனைவருமே கணித்துள்ளனர்.
Tamil Nadu Election Results Live: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? - லைவ் அப்டேட்ஸ்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் த.வெ.க. முன்னிலை- செல்வப்பெருந்தகை பின்னடைவு

தி.நகர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை

தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: விழுப்புரம் தொகுதியில் அதிமுக முன்னிலை

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: கொளத்தூர் தொகுதியில் 471 வாக்குகள் பெற்று த.வெ.க. முன்னிலை- மு.க.ஸ்டாலின் பின்னடைவு

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பின்னடைவு

ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பின்னடைவு

மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை முன்னிலை

TN Assembly Election Result : திமுக-24, அதிமுக-4, தவெக-3 தொகுதிகளில் முன்னிலை

சென்னை அண்ணாநகர் தொகுதியில் கட்சி முகவர்கள் வாக்குவாதம்- பரபரப்பு

TN Assembly Election Result : ஈவிஎம் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

தபால் வாக்கு எண்ணிக்கை : பூந்தமல்லி தொகுதியில் தி.மு.க. முன்னிலை

திருச்சி மேற்கில் த.வெ.க. முன்னிலை- கே.என்.நேரு பின்னடைவு

திருச்சி கிழக்கில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை

ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க. முன்னிலை

கோவை தெற்கில் செந்தில் பாலாஜி முன்னிலை

குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

மதுரை மேற்கில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ முன்னிலை

ஏற்காட்டில் வாக்கு எண்ணும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

தபால் வாக்கு எண்ணிக்கை : திருச்சி கிழக்கில் த.வெ.க. தலைவர் விஜய் பின்னடைவு

தபால் வாக்கு எண்ணிக்கை : திருச்சி கிழக்கு தொகுதியில் 5 செல்லாத ஓட்டுகள்

தபால் வாக்கு எண்ணிக்கை : கொளத்தூர், ஆர்கே நகர், சேப்பாக்கம், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. முன்னிலை

நெல்லை தொகுதியில் த.வெ.க. முன்னிலை

பாதுகாப்பு வளையத்தில் விஜய் இல்லம்

த.வெ.க. தலைவர் விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தபால் வாக்கு எண்ணிக்கை : சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

தபால் வாக்கு எண்ணிக்கை : சேலம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை

தபால் வாக்கு எண்ணிக்கை : பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலை

தபால் வாக்கு எண்ணிக்கை : கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 அறைகள் தயார் நிலையில் உள்ளன. தபால் வாக்குகளை எண்ணுவதற்காக 240 அறைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக 3,324 மேஜைகளும் போடப்பட்டுள்ளன. இப்படி வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார்? என்கிற எதிர்பார்ப்பும், பேச்சும் காரசாரமான விவாதமாகவே இருந்து வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் கண்ட நிலையில் விஜய்யின் த.வெ.க., சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் தனித்து போட்டியிட்டன. முதன்முறையாக தேர்தல் களம் கண்டுள்ள விஜய் இந்த தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. சட்டமன்ற தேர்தலில் 3,579 ஆண்கள், 443 பெண்கள், 3-ம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் தேர்தலை சந்தித்தனர்.

சட்டமன்ற தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஒரு சில தொகுதிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது. எப்போதும் இல்லாத வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் மிகுந்த ஆர்வத்தோடு ஓட்டுப்போட்டு இருக்கிறார்கள். இப்படி சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இளைஞர்கள் எழுச்சியுடன் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். முதல் தலை முறை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் இந்த முறை தாங்கள் விரும்பும் கட்சிகளுக்கு செலுத்தி இருக்கிறார்கள். இதனால் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் வாக்கு இந்த தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அனைவருமே கணித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இதற்காக 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 4 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 833 வாக்காளர்களில் பெண்கள் அதிக அளவில் ஓட்டுப் போட்டுள்ளனர். 2 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 596 பெண்களும், 2 கோடியே 35 லட்சத்து 34 ஆயிரத்து 720 ஆண்களும், 4 ஆயிரத்து 517 திருநங்கைகளும் வாக்களித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com