நீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை: திமுக - தவெக இடையே காரசார விவாதம்

வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை.
Minister N.Anand- I.Periyasamy
Published on

தமிழக சட்டசபையில் இன்றைய கூநீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார்.

இதைதொடர்ந்து, நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.

திமுக எம்எல்ஏ ஐ.பெரியசாமி உரை:

திமுக ஆட்சியில வருடத்திற்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. திமுக ஆட்சியில் அனுமதிக்கப்பட்ட வீடுகள் அடித்தளத்துடன் நிற்கின்றன.

தொகையை உயர்த்தி எண்ணிக்கையை குறைத்துவிட்டனர்.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்:

திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை. வீடு கட்ட திமுக ஆட்சியில் கொடுத்த ரூ.3.5 லட்சம் போதுமானதாக இல்லை.

வீடுகள் முறையாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் வழங்குகிறது தவெக அரசு.

ஐ.பெரியசாமி:

தற்போது எம் சாண்ட் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர். ஜல்லி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றி விட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்துவிட்டது.

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்:

திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கவில்லை. வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கெனவே வீடு வைத்துள்ளவர்களுக்கு வீடு கட்டப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்கான ஆதாரம் உள்ளது.

ஐ.பெரியசாமி

அலுவலர்கள் தான் தேர்வு செய்கின்றனர். தவறு நடக்கிறது என்பதற்காக திட்டத்தை நிறுத்தக்கூடாது.

கட்சி, சாதி மத பாகுபாடின்றி விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு தருவதற்கு முயற்சி. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசுக்கான இழப்பை குறைக்க உதவும்.

வீடு பெறும் பயனாளிகளை தேர்ந்தெடுப்பது அதிகாரிகள் அடங்கிய குழு தான். வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிதி தந்தாலும் தற்போது விலை உயர்ந்துள்ளதால் நிதி பற்றாக்குறை தான்.

வீடு கட்டும் திட்டத்தில் பெயரை மாற்றிவிட்டு வீடுகளின் எண்ணிக்கையை தவெக அரசு குறைத்துவிட்டது.

அமைச்சர் ஆனந்த்:

திமுக ஆட்சியில் வீடுகள் முழுமையாக கட்டப்படவில்லை. மக்கள் இன்னும் குடிசையில் தான் வசிக்கின்றனர்.

ஐ.பெரியசாமி:

கொள்கை தலைவர் என சொல்கிறீர்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தமிழக அரசு வளர்ச்சி திட்டம் என மாற்றியது நியாயமா? மறுமலர்ச்சி திட்டத்தில் அண்ணாவின் பெயரை மாற்றியது வருத்தமாக உள்ளது.

அமைச்சர் பிரபு:

திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 100 கோடி மெட்ரிக் ஜல்லி உற்பத்தி, 85 கோடி டன் மெட்ரிக் டன் தான் பயன்படுத்தியுள்ளனர்.

அமைச்சர் ஆனந்த்:

வீடு கட்டும் திட்டத்தில் பல தவறுகள் நடந்துள்ளது என திட்டவட்டமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com